தமிழக கடற்கரையை நெருங்கி வந்த தித்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு வலுவிழந்தது.
வங்கக் கடலில் உருவாகி இருந்த தித்வா புயல் , தமிழகத்தை நோக்கி வரும் வழியில் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது. 900க்கும் அதிகமானவர்களை பலி கொண்டு, பெரும் பொருட் சேதத்தை தித்வா புயல் மேற்கண்ட நாடுகளில் ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே தமிழக கடற்கரையை நெருங்கி வந்த தித்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு வலுவிழந்தது. சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கு திசையில் 90 கி.மீ தொலைவிலும் காரைக்காலுக்கு வடகிழக்கு திசையில் 180 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 90 கி.மீ தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. தொடர்ந்து இது வடக்கு நோக்கி நகர்ந்து இன்று மதியத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால் மெரினா, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு, எண்ணூர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் சீற்றமாக இருந்தது. குறிப்பாக எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தது. அவ்வப்போது ராட்சத அலைகள் எழுந்தது. அதே வேளையில், கனமழை பெய்யாததால் கடற்கரையை நோக்கி மக்கள் வர தொடங்கினார்கள். இதனால் மெரீனா உள்ளிட்ட பீச் பகுதிகளுக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலெர்ட் :
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
Rains to start soon in KTCC (Chennai) -Pondy belt as we go into evening / night rains will pickup more intensity. Note it is not raining anywhere else.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 29, 2024
This cyclone is going to give very very heavy rains to KTCC (Chennai) to Pondy belts. Extreme caution and watch need to be… pic.twitter.com/iYX9DnSFnd
