வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஜனவரி 8 முதல் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, டிசம்பர் இறுதி முதல் மாநிலம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று சென்னை மற்றும் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு மழைக்காலத்திற்கான சூழல் உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, ஜனவரி 8-ம் தேதி முதல் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோரப் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று குறைந்திருந்த சூழலில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் மழையை கொண்டுவரப் போவது குறிப்பிடத்தக்கது.
Nandri indianexpress
